நீங்க தனியார் நிறுவன ஊழியரா? அப்போ உஷாரா இருங்க – வேலை பறிபோகும் அபாயம்!
உலகில் பல்வேறு நாடுகளில் தற்போது தனியார் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறு, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமல்லாமல் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளன. அது பற்றிய தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
பணி நீக்கம்:
பொதுவாகவே மனிதர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்பது இன்றியமையாதது. இதை பெறுவதற்கு அனைவர்க்கும் உதவுவது ஒருவர் கையில் இருக்கும் வேலையே. அனைவருக்கும் அரசு வேலை என்பது கிடைப்பதில்லை. எனவே முக்கால்வாசி மக்கள் தனியார் துறையை நம்பி உள்ளனர். இதில் இருக்கக்கூடிய எதிர்மறை அம்சம் என்னவென்றால் தனியார் துறையில் வேலை நிரந்தரமானது என்று நம்மால் சொல்லமுடியாது.
எந்த சூழ்நிலையிலும் வேலை பறிபோகலாம் என்ற அபாயம் தனியார் துறையில் இருக்கும். இந்நிலையில் தற்போது உலகம் முழுக்க பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. இதை எதிர்கொள்வதற்காக பல நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்பிள், நிவிடியா, டெஸ்லா, நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் கூட இந்த முடிவை எடுத்து அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்த பென்ஷன் திட்டத்தில் சேருங்கள்.. ரூ.210 முதலீட்டில் மாதம் ரூ.5,000 கிடைக்கும் – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனமும் தனது செலவுகளை 10% குறைக்க திட்டமிட்டுள்ளதாம். எனவே வரும் காலங்களில் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப மெட்டா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் வெளியாகி தனியார் துறை ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்