Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – ரூ.12,00,000 ரிட்டன்ஸ்
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதலீடு செய்வதால் வங்கிகளை காட்டிலும் அதிக லாபத்தை பெற முடியும். தற்போது அஞ்சல் துறையில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் பலன்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
இந்தியாவில் தற்போது அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலானோர் கணக்கை தொடங்கியுள்ளனர். ஏனெனில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு லாபங்கள் கிடைக்கிறது. அத்துடன் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைப்பதால் இதில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர். மேலும் இதில் கிடைக்கும் தொகை கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மிகவும் உதவியாக உள்ளது. தற்போது பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் தற்போது பெண்களுக்கென்று செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பிறந்த குழந்தை முதல் 10 வயது நிரம்பிய குழந்தை வரை சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆனால் அவர்களின் பெற்றோர் பெயரில் கணக்கை தொடங்க வேண்டும். மேலும் இத்திட்டத்தில் இணைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரி சான்றுக்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பயன்பாட்டு பில் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் வாக்காளர் அட்டை, ஆதார் அல்லது பாஸ்போர்ட் இதில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – இ நாமினேஷன் செய்வதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
இதில் இணைவதற்கு வங்கி அல்லது தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1என்ற படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் தங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கணக்கு தொடங்கப்படும். இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.250 முதல் தொடங்கி முதலீடு செய்து கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 2500 தொகையை முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் வட்டி கணக்கிடப்படும். அதன்படி இந்த திட்டத்தில் முதிர்வு காலத்தில் ரூ.12,00,000 லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும்.