Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அஞ்சலகத்தின் சில சேமிப்பு திட்டங்களில் கடந்த ஏப்ரல் 1 முதல் வாடிக்கையாளர்கள் பெறும் வட்டி நேரடியாக கணக்கிற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வட்டி விகிதமானது பயனர்களின் அஞ்சல சேமிப்பு கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அந்த வகையில் அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலகத்தில் டைம் டெபாசிட் திட்டங்களில் எப்படி வங்கிக் கணக்கை இணைப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு:
அனைத்து அலுவலகங்களிலும் நிதி ஆண்டாக ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி மார்ச் மாதம் வரை கருதப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு, ஆதார் – பான் இணைப்பு , PF அக்கவுண்ட் வட்டித் தொகைக்கு வரி, போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு வட்டி பெறுவதற்கான மாற்றம் போன்ற புதிய மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் சிறுசேமிப்பில் அஞ்சலக சேமிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற முதலீடுகளை விட இது பாதுகாப்பானதாகவும், வட்டி சற்று அதிகம் என்பதாலும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல், அஞ்சலக கணக்குகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களான,சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக டெபாசிட் திட்டம், மாத வருமானத் திட்டம் ஆகியவற்றுக்கு வட்டி தொகை, பணமாக வழங்கப்படாது என வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு – ஏப்ரல் 20க்குள் மேல்முறையீடு!
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்குடன் இணைக்க வேண்டும், இதன் மூலம் வட்டித் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் இந்த திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் வங்கிக் கணக்கை இணைக்காவிட்டால் வட்டித் தொகை காசோலை மூலம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒருவரின் சேமிப்பு கணக்கினை அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்டுடன் இணைக்க, டெபாசிட் செய்பவர் ECS படிவத்தினை, கேன்சல் செய்த காசோலையை இணைத்தும் அல்லது வங்கி கணக்கின் பாஸ்புக்கின் முதல் பக்கத்தையும் கொடுக்கலாம். அதோடு MIS அல்லது SCSS அல்லது TDயின் பாஸ்புக்கினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும்.
மேலும் அஞ்சலத்தின் சேமிப்பு கணக்குடன் இணைக்க அக்கவுண்ட் ஹோல்டர் SB – 83 என்ற படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அந்த திட்டத்தின் MIS அல்லது SCSS அல்லது TDயின் பாஸ்புக்கினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இது அஞ்சலகத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு இணைக்கப்படும். டெபாசிட் கணக்குகளுக்கு வட்டி செலுத்தப்படுவதே பல கணக்குதாரர்களுக்கு தெரியவில்லை என தபால் துறை தெரிவித்துள்ளது. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், மோசடிகளை தடுக்கும் வகையில், இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது என குறிப்பிட்டு உள்ளது. பொதுவாக அஞ்சலக திட்டங்களை பொறுத்த வரையில் , வங்கி டெபாசிட் திட்டங்களை விட வட்டி விகிதம் அதிகம் ஆகும்.