Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.2,500 வரை வருமானம் தரும் சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஏராளமானோர் சேர்ந்தும் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சல் துறை தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மாத வருமானத் திட்டம்:
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் நிலையங்களும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயன் பெறும் வகையில் உள்ளதால் சேமிப்பு திட்டங்களில் சேர மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாது பெரியவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் திட்டம் போன்றவைகளும் உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து மாதாந்திர வருமான திட்டம் அஞ்சலகத்தில் மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டம் எதிர்காலத்தில் வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டமாக உள்ளது. இந்த மாதாந்திர வருமான திட்டத்தில்,1000 ரூபாயை செலுத்தி கணக்கு துவங்கலாம். இதில் ரூ.4.5 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். மேலும் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொள்ளலாம். அதில் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் வாயிலாக உங்கள் பணத்தை முழு உத்தரவாதத்துடன் வட்டியுடன் திரும்பப் பெறலாம். இத்திட்டத்தில் ஆண்டு வட்டி 6.6 % வட்டி வழங்கப்படுகிறது.
HCL நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள், இவை முடிந்த பிறகு மாத வருமானத்தை பாலிசிதாரர் பெறலாம். அதாவது மொத்தம் ரூபாய் 4.5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 வருடங்களுக்கு பின் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 29,700 கிடைக்கும். நீங்கள் சேமித்த தொகையை 1 வருடத்திற்கு முன் எடுக்க முடியாது. முதிர்வு காலம் முடிந்ததும் நீங்கள் பணத்தை எடுத்தால் தான் திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும். இதில் தனிநபர் கணக்கை பொருத்தவரையில் மாதந்தோறும் ரூ.2,475 என்ற வகையில் வருமானம் கிடைக்கும். அதே ஜாயின் அக்கவுண்ட்டில் ரூ.5000 கிடைக்கும்.