Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இதை உடனே பண்ணுங்க!

0
Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - இதை உடனே பண்ணுங்க!
Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - இதை உடனே பண்ணுங்க!
Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இதை உடனே பண்ணுங்க!

இந்தியாவில் உள்ள போஸ்ட் ஆஃபிஸில் சேமிப்புக் கணக்கு வைத்து இருப்பவர்கள் MIS/SCSS/TD ஆகிய கணக்குகளை இணைப்பதற்கான SB-83 படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அஞ்சல் துறை அறிவித்து உள்ளது. அதனால் போஸ்ட் ஆபீஸில் வட்டி வாங்குபவர்கள் உடனடியாக இதனை செய்யுமாறும் கூறியுள்ளனர்.

போஸ்ட் ஆபீஸ்:

போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து இருப்பவர்கள் மற்றும் சேமிப்பு கணக்கை புதிதாக ஆரம்பிக்க உள்ளவர்கள் கட்டாயமாக இந்த தகவலை அறிந்து கொள்ளவும். வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்கி வரும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று பிளான் வைத்து இருந்தால் அவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் கொண்ட தொகுப்பு தான் இது. சேமிப்பு கணக்கு இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வங்கியில் மட்டும் தான் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பது இல்லை. கட்டாயமான முறையில் மக்கள் சேமிப்பு கணக்கை வைத்து உள்ளது அவர்களுக்கு பிற்காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் தற்போது சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட குறிப்பில், போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்பவரின் அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் தனது சேமிப்புக் கணக்கை மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துடன் இணைக்க முடியாவிட்டால், மாதந்தோறும் வருமானத் திட்டம் மற்றும் டெர்ம் டெபாசிட் கணக்குகள், நிலுவையில் உள்ள வட்டியை அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது காசோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சொன்ன விளக்கம்!

இது தவிர, அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குடன் தங்களது MIS/SCSS/TD கணக்குகளை இணைப்பதற்கான SB-83 படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மேலும் அதன் ஒப்புதலுக்கான எஸ்சிஎஸ்எஸ்/டிடி கணக்குப் புத்தகம் மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் நோக்கத்திற்காக அஞ்சல் அலுவலகத்திற்கு அவர்களது அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு பாஸ்புக்கை எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கணக்கு இணைக்கப்படும். அதன் பின்னர் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களில், சுகன்யா சம்ரித்தி யோஜனா தற்போது 7.6%, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 7.4% மற்றும் PPF 7.1% வழங்குகிறது. மேலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்றும் அஞ்சல் துறையின் சார்பில் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!