Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – குறைதீர்வு கூட்டம் அறிவிப்பு!

0
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - குறைதீர்வு கூட்டம் அறிவிப்பு!
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - குறைதீர்வு கூட்டம் அறிவிப்பு!
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – குறைதீர்வு கூட்டம் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பாதிப்பை பொதுமக்கள் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், வரும் 17ம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

குறை தீர்வு கூட்டம்:

போஸ்ட் ஆபீஸில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மக்கள் பலரும் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். சேமிப்பு என்று வந்தவுடன் எதை கவனிக்கிறோமோ இல்லையோ வட்டியை பற்றி கட்டாயம் கவனிப்போம். சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டியை கருத்தில் கொண்டு தான் அதில் சேமிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்போம். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் தான் முதல் தேர்வாக இருக்கும்.

Exams Daily Mobile App Download

சேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டாகவும், நல்ல வருமானம் கிடைக்கும் திட்டங்களாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை, குறுகிய காலத்தில் இரட்டிப்பாக மாற்றிட முடியும். அந்த வகையில் சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் , PPF திட்டம் , மாத வருமானத் திட்டம், தேசிய சேமிப்பு திட்டம், டைம் டெபாசிட் திட்டம், டைம் டெபாசிட் திட்டம், சேமிப்பு வங்கி கணக்கு ஆகிய திட்டங்களில் முதலீடு செய்த தொகை இரட்டிப்பு ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.2000 தவணைத்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில் காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், வரும் 17ம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறியது, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வரும் 17ம் தேதி காலை, 11 மணிக்கு, அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர், ஏதேனும் குறைகள் இருந்தால், தணிக்கை அலுவலர், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு, வரும் 10ம் தேதிக்குள் குறைகளை தபால் வாயிலாக அனுப்பலாம். மேலும் 17ம் தேதி நடக்கும் குறை தீர்வு முகாமில், நேரிலும் கலந்து கொள்ளலாம் என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!