PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ‘இதை’ செய்தால் மட்டுமே இனி தவணைத்தொகை!

0
PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு - 'இதை' செய்தால் மட்டுமே இனி தவணைத்தொகை!
PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு - 'இதை' செய்தால் மட்டுமே இனி தவணைத்தொகை!
PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ‘இதை’ செய்தால் மட்டுமே இனி தவணைத்தொகை!

நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம்-கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் 12 வது தவணை தொகையை பெற முக்கிய அப்டேட் ஒன்றை செய்ய வேண்டும் என மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PM Kisan திட்டம்

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 பெற தகுதியுடையவர்கள். இது ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. மே 31, 2022 அன்று, பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன் அடிப்படையில் 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகளின் கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு சுமார் ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கி கட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் பலன் பெறும் விவசாயிகள் தங்களது இகேஒய்சியை முடிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு – இன்றைய மாலை நிலவரம்!

இந்நிலையில், விவசாகிகள் 12 வது தவணை தொகைக்காக காத்துக் கொண்டு உள்ளனர். மேலும் 12 வது தவணை தொகை இந்த மாதம் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு 12-வது தவணை தொகை வழங்குவதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில், (ஆகஸ்ட்) இந்த மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எனவே, பி.எம்.கிசான் வலைதளங்களில் ஆதார் எண்ணை பதிவிட்டால் மட்டுமே இனி விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

மேலும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், www.pmkisan.gov.in என்ற வலைதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால், ஓ.டி.பி., எண் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். இதுவரை இணைக்காத விவசாயிகள், தங்கள் மொபைல் போன் மூலம் அல்லது இ-சேவை மையம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம். அவ்வாறு இணைத்த பின்னரே, அடுத்த தவணைத்தொகை விடுவிக்கப்படும் .எனவே, இதுவரை பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக ஆதார் எண்ணை புதுப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!