PM KISAN திட்ட தமிழக பயனாளிகள் கவனத்திற்கு – கடன் அட்டை பெற சிறப்பு முகாம் ஏற்பாடு!
கிசான் வங்கி திட்டத்தின் கீழ் பதிவுசெய்யபட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் கிசான் கடன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கிசான் கடன் அட்டை வழங்குவதற்கான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிசான் அட்டை:
இந்தியாவில் மத்திய அரசின் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6000 ரூபாய் வீதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டுமே பயன் பெற முடியும். இதுவரை 11 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் தொகையை பெற உரிய வழிமுறைகளை ஆன்லைனில் முடிக்க வேண்டும்.
ExamsDaily Mobile App Download
அதில் குறிப்பாக KYC செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியமாகும். பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் வங்கிக் கணக்குகள் மூலம் கிசான் கடன் அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் மே 1 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் நேரடி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து முகாமில் கடன் அட்டை பெற பதிவு செய்யலாம் என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
HCL நிறுவனத்தின் புதிய ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – சம்பள உயர்வு!
இது மட்டும் இல்லாமல் முகாமில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறைப்படி பதிவு செய்வது எப்படி மற்றும் தவறான பதிவுகளைத் தவிர்ப்பது எப்படி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், விவசாயிகளுக்கான அனைத்து நலத்திட்டங்கள் அவற்றில் கிடைக்கக்கூடிய சலுகைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்க உள்ளனர். அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கென உருவாக்கப்பட்ட உழவன் செயலி பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட உள்ளது.