PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ‘இதை’ செய்தால் தான் 12 வது தவணை தொகை!

0
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு - 'இதை' செய்தால் தான் 12 வது தவணை தொகை!
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு - 'இதை' செய்தால் தான் 12 வது தவணை தொகை!
PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ‘இதை’ செய்தால் தான் 12 வது தவணை தொகை!

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஓன்று வெளியாகி இருக்கிறது. அதாவது eKYC காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

eKYC அப்டேட்:

பிரதமர் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் 11 வது தவணையாக உதவித் தொகையை விவசாயிகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு வழங்கியது. இந்த 11வது தவணை விடுவிக்கப்பட்டதில் 10 கோடி விவசாயிகள் பலன் அடைந்தனர். ஆண்டுதோறும் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தவணைத் தொகையை விவசாயிகள் பெற்றுள்ளனர். 11வது தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு மற்றொரு நல்ல செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதாவது இந்தத் திட்டத்தில் இகேஒய்சி (eKYC) அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு – ஜூலை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த தகவல் பிரதமர் கிசான் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த திட்டத்தின் கீழ் eKYC அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மே மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு வழங்கியிருந்தது. இத்தகைய சூழலில், மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், “பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டப் பயனாளிகள் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. PM Kisan Yojana கணக்கின் eKYC ஐ முடிப்பது எளிதான செயலாகும். முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்ய முடியும் என்பதால், உங்கள் வீட்டிலிருந்து நேரடியாகச் செய்யலாம்.

eKYC அப்டேட் செய்வது எப்படி:

  • eKYC ஐ முடிக்க விரும்பும் அனைத்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளும் PM Kisan Yojana இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும், அதாவது https://pmkisan.gov.in .
  • திரையில் காணப்படும் ‘e-KYC’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆதார் எண்ணை இங்கே உள்ளிடவும்.
  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTPயைப் பெறுவீர்கள். திரையில் இந்த OTP ஐ உள்ளிட்டு ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் திரையில் ‘வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கவும்’ என்ற செய்தியைப் பெறுவீர்கள். உங்கள் ‘e-KYC’ செயல்முறை முடிந்துவிட்டது என்பதை இது குறிக்கிறது.
  • இதை நீங்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையேல், உங்கள் அடுத்த தவணை பணம் வந்து சேராது.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!