PM Kisan திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.2,000 கிடைத்து விட்டதா? சரிபார்ப்பது எப்படி?
இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிரதமர் கிசான் சன்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 11வது தவணை வழங்கப்பட்டுள்ளது. இது உங்களின் வங்கி கணக்கில் வந்து விட்டதா? என்பதை எப்படி சரிபார்க்காலம் என்று பார்ப்போம்.
பயனாளிகள் கவனத்திற்கு
இந்தியாவில் வேளாண்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு, காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறை வாரியாக நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலமாக நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும், உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவுத்தொகை பெற பயனாளிகள் தங்களின் e-KYC விவரங்களை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கு வருகிற ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் குறித்த விவரத்தை இணைப்பத்திருக்க வேண்டும். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு 11 தவணை வரை வழங்கப்பட்டுள்ளது. இதில் 11வது தவணை கடந்த மே 31ம் தேதி அன்று பிரதமர் மோடி அவர்களால் வெளியிடப்பட்டது.
சரிபார்ப்பது எப்படி?
1. இதற்கு முதலில் https://fw.pmkisan.gov.in/
2. இப்போது இணையதளத்திற்கு சென்ற பிறகு உங்களின் ஆதார் எண், மொபைல் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிட வேண்டும்.
3. இதையடுத்து ஆதார், மொபைல், கணக்கு எண் போன்றவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. இறுதியாக உங்களின் வாங்கி கணக்கில் உதவித்தொகை வந்து விட்டதா என்பதை திரையில் காண்பிக்கப்படும்.