PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள் உயர்வு? விரைவில் அறிவிப்பு!

0
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - வட்டி விகிதங்கள் உயர்வு? விரைவில் அறிவிப்பு!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - வட்டி விகிதங்கள் உயர்வு? விரைவில் அறிவிப்பு!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள் உயர்வு? விரைவில் அறிவிப்பு!

வருகின்ற ஜூன் மாதத்தில் பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் உயர்வடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

வட்டி விகிதங்கள்

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குடிமக்கள் குறைந்த ஆபத்து கொண்ட குழுக்கள் அல்லது தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களை சார்ந்துள்ளனர். இதில், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் மிகவும் நம்பகமானவை ஆகும். ஏனெனில் அவை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன. மேலும் நாட்டில் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் உட்பட பெரும்பாலான வங்கிகளை விட இவை அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இருப்பினும், நீண்ட காலமாக இந்த சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தவில்லை

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவற்றில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அடுத்த மாத இறுதியில் நல்ல செய்தி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் மாதத்தில் PPF, NSC அல்லது SSY திட்ட வட்டி விகிதங்களை மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதற்கு முன்னதாக நாட்டின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்த கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, சிறு சேமிப்புத் திட்டங்கள் மற்றும் தபால் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்கான மதிப்பாய்வில், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஒரே மாதிரியாக வைத்திருக்க மையம் முடிவு செய்தது. இந்த விதிகளின்படி, ஒரு அரசாங்கக் குழு ஜூலை 2022 முதல் காலாண்டுக்கான புதிய கட்டணங்களை ஜூன் 30ம் தேதிக்குள் அதாவது அடுத்த மாத இறுதி மற்றும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிவிக்கப்பட இருக்கிறது.

தபால் அலுவலக திட்டங்களின் தற்போதைய வட்டி விகிதங்கள்:
  • பொது வருங்கால வைப்பு நிதி – 7.1 சதவீதம்
  • தேசிய சேமிப்பு சான்றிதழ் – 6.8 சதவீதம்
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா – 7.6 சதவீதம்
  • கிசான் விகாஸ் பத்ரா – 6.9 சதவீதம்
  • சேமிப்பு வைப்பு – 4 சதவீதம்
  • 1 ஆண்டு கால வைப்பு – 5.5 சதவீதம்
  • 2 ஆண்டு கால வைப்பு – 5.5 சதவீதம்
  • 3 ஆண்டு கால வைப்பு – 5.5 சதவீதம்
  • 5 ஆண்டு கால வைப்பு – 6.7 சதவீதம்
  • 5 ஆண்டு தொடர் வைப்பு – 5.8 சதவீதம்
  • 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் – 7.4 சதவீதம்
  • 5 ஆண்டு மாத வருமானக் கணக்கு – 6.6 சதவீதம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!