PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ‘இதை’ செய்தால் கணக்கு முடக்கம்! புதிய விதிகள் அறிமுகம்!

0
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - 'இதை' செய்தால் கணக்கு முடக்கம்! புதிய விதிகள் அறிமுகம்!
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு - 'இதை' செய்தால் கணக்கு முடக்கம்! புதிய விதிகள் அறிமுகம்!
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ‘இதை’ செய்தால் கணக்கு முடக்கம்! புதிய விதிகள் அறிமுகம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் லட்சக்கணக்கான பணியாளர்கள், பென்ஷன் தொகையை சேமித்து வருகின்றனர். இது முதுமைக்கு ஒரு பாதுகாப்பான ஆதாரமாக இருக்கிறது. மேலும் அவர்கள் இபிஎஃப்ஓ தொடர்பான விதிகளைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய விதிகள்:

PF எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஒரு நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டு கணக்கு ஆகும். இது ஊழியர், நிர்வாகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பால் உருவாக்கப்படும் ஒரு சேமிப்பு நிதி என்பது குறிப்பிடத்தக்கது. இது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நடத்தப்படும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்த நிதி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Exams Daily Mobile App Download

பிஎஃப் கணக்கில் பல ஆண்டுகளாக டெபாசிட் செய்யப்பட்ட தொகை, வட்டியுடன் சேர்ந்து ஓய்வு பெறும்போது பணியாளருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பல சமயங்களில் போதுமான தகவல் இல்லாததாலும், சில தவறுகள் காரணமாகவும் ஊழியர்களின் PF கணக்கு மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆகையால், பிஎஃப் உறுப்பினர்கள், EPFO விதிகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊழியர் ஒருவர் முன்னதாக ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு புதிய நிறுவனத்திற்கு மாறும்போது அவரது PF கணக்கை மாற்றாமல் இருந்து, பழைய நிறுவனம் மூடப்பட்டாலோ, அந்த நபரின் PF கணக்கில் இருந்து 36 மாதங்களுக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றாலோ, ஊழியரின் PF கணக்கு மூடப்பட்டு, அத்தகைய கணக்குகளை ‘செயல்படாத’ பிரிவில் சேர்க்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – மே 31ம் தேதி அறிவிப்பு?

.செயல்படாத’ கணக்காக மாறிய கணக்கை , மீண்டும் செயல்பட வைக்க, PF-க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். .மேலும் கணக்கு ‘செயல்படாத’ நிலைக்கு சென்றாலும், கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி தொடர்ந்து கிடைக்கிறது. அதாவது ஊழியரின் பணம் வீணாகாமல்,அதை திரும்பப் பெறுவார். முன்னதாக, இந்தக் கணக்குகளுக்கு வட்டி கிடைத்ததில்லை. ஆனால், 2016ல் விதிகள் திருத்தப்பட்டு இந்த தொகைக்கான வட்டி தொடங்கப்பட்டது. ஊழியர் 58 வயதை அடையும் வரை உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி சேரும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!