உங்கள் வீட்டில் செல்ல பிராணி இருக்கா? அப்போ கட்டாயம் இதைச்செய்ய வேண்டும்.. மீறினால் அபராதம்!
ஹரியானா மாநிலத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வைத்திருக்கும் வளர்ப்பு நாய்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. யாரேனும் பதிவு செய்யாதது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய்:
தமிழகத்தில் சென்னை மாநகராட்சி கடந்த மாதம் வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போர் அதனை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. நாய்கள் வைத்திருப்போர்கள் ரூ. 50 செலுத்தி அதனை குடிமை அமைப்பின் கால்நடை மருத்துவமனைகளில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் பதிவு செய்யும் நாய்களுக்கு மாநகராட்சி சார்பாக கழுத்தில் அணியும் படியான ஐடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் பதிவு செய்யும் நாய்களுக்கு இலவச தடுப்பூசிகள் செலுத்தப்படும். அத்துடன் உடல்நிலை சரியில்லாத போது தொடர் சிகிச்சைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எதிர்பாராத விதமாக உங்கள் நாய் தொலைந்து போனால் மாநகராட்சியிடம் உரிமையாளர் புகார் அளிக்கும் பட்சத்தில் அதனை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக கோவில்களில் யாகங்கள் நடத்த தடை – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு!!
Follow our Instagram for more Latest Updates
தற்போது மாநகராட்சியில் எத்தனை நாய்கள் உள்ளது என்பதை கண்டறியவும் நாய்களை முறையாக பராமரிக்கும் நோக்குடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தை தொடர்ந்து ஹரியானாவில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது வளர்ப்பு நாய்களை பதிவு செய்வதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. மேலும் பதிவு செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.