குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு – ரூ.150 போதும்! ரூ.8 லட்சம் ரிட்டன்ஸ்!

0
குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு - ரூ.150 போதும்! ரூ.8 லட்சம் ரிட்டன்ஸ்!
குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு - ரூ.150 போதும்! ரூ.8 லட்சம் ரிட்டன்ஸ்!
குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு – ரூ.150 போதும்! ரூ.8 லட்சம் ரிட்டன்ஸ்!

பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்கால செலவினங்களுக்காக பல்வேறு வகைகளில் சேமித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரிஸ்க் இல்லாமல் முழு பாதுகாப்புடன் தங்களின் குழந்தைகளுக்கு சேமிக்க காப்பீடு நிறுவனமான LICயில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் “ஜீவன் தருண்” திட்டத்தில் சேமித்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

“ஜீவன் தருண்”

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக அவர்களின் சிறு வயதில் இருந்து சேமித்து வருகின்றனர். இதையடுத்து தற்போது வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் காப்பீடு நிறுவனமான LIC-யிலும் உங்களின் குழந்தைகளின் எதிர்கால செலவினங்களுக்கு சேமிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் குறிப்பாக அதிக லாபத்தை தரும் விதமாக “ஜீவன் தருண்” திட்டத்தில் சேமிப்பது குறித்த முழு விவரத்தையும் பார்ப்போம்.

ஜீவன் தருண் திட்டத்தில் தங்களின் குழந்தை பிறந்த 90 நாள் முதல் 12 வயதிற்குள் முதலீடு செய்ய வேண்டும். இதில் 20 வயது வரை முதலீடு பணத்தை மாதந்தோறும் செலுத்த வேண்டும். அதன்பின்பு 25வது வயதில் ஜீவன் தருண் திட்டத்தின் முதிர்வு காலம் முடிவடையும். இந்த முதிர்வு காலத்தின் முடிவில் உங்களுக்கு முதலீடு செய்த தொகையுடன், போனஸ் தொகை, குறைந்தபட்ச உறுதித் தொகை, லாயல்ட்டி தொகை உள்ளிட்டவை கிடைக்கும். அத்துடன் முதிர்வு காலம் முடிவடைதற்குள் உங்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்காக பணத்தேவை ஏற்பட்டால் இடையில் பெறுவதற்கான வசதிகளும் உள்ளது.

தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பணி தீவிரம் – நாளை ‘இந்த’ மாவட்டத்தில்’ மெகா தடுப்பூசி முகாம்!

Exams Daily Mobile App Download

ஆனால் முதிர்வு காலம் முடிவதற்கு இடைப்பட்ட காலத்தில் 5%, 10%, 15% தொகையை மட்டுமே பெற முடியும். மேலும் இத்திட்டத்தில் வருடத்திற்கு ரூ.55 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி முதிர்வு காலத்தின் முடிவில் போனஸ் தொகையாக ரூ. 2,47,000யும், குறைந்தபட்ச உறுதித் தொகையாக ரூ.5 லட்சமும், லாயல்ட்டி நன்மையாக ரூ.97,500 ரூபாயும் கிடைக்கிறது. இவ்வாறாக இத்திட்டத்தில் முதலீடு செய்வதால் உங்களின் குழந்தைகளின் எதிர்கால செலவினத்தை அச்சமின்றி எதிர்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!