ஆன்லைன்ல நீங்க பொருள் வாங்குவீங்களா – அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்! உஷார் மக்களே!
இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் நேரிலும் ஆன்லைன் வாயிலாகவும் மக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நேரத்தில் பல சீன வலைத்தளங்கள் மூலம் போலியான விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி விளம்பரங்கள்:
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மக்களுக்கு பல்வேறு ஆபர்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக அமேசான், பிலிப் கார்ட், மீசோ போன்ற தளங்களில் விற்பனை சூடுபிடித்து உள்ளது. மக்கள் அதிகம் பொருட்களை வாங்கும் இது போன்ற பண்டிகை காலத்தை குறி வைத்து சில மோசடி கும்பல் போலியான விளம்பரங்களையும், தகவல்களையும் பரப்புகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
போலியான நிறுவனங்கள் தங்களின் வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாகவும், ஆபர் உள்ளதாகவும் கூறி சில லிங்குகளை பரிந்துரை செய்கின்றனர். இதனை கிளிக் செய்து உள்நுழையும் போது உங்களின் வங்கி கணக்கு விவரங்கள், அதன் IFSC கோட் மற்றும் டெபிட், கிரேட் கார்டு எண் போன்றவை திருடப்படுகிறது.அதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளிக்கு பின் இனி இந்த போன்களில் WhatsApp செயலி இருக்காது – பயனர்கள் அதிர்ச்சி! முழு விவரம்!
Exams Daily Mobile App Download
மேலும் போலி ஆபர்களை அறிவிக்கும் நிறுவனங்கள் சீன தொடர்புடையதாக உள்ளது. ஏனெனில் லிங்குகள் அனைத்தும் சீன வலைத்தளங்களுக்கு கொண்டு செல்கிறது.மேலும் அந்த நிறுவனங்கள் பரிசுகள் வழங்குவதாக ஆசை காட்டி லிங்குகளை ஷேர் செய்ய சொல்லி அதன் மூலம் பலரின் தனிப்பட்ட டேட்டாக்களை கைப்பற்றி வருகின்றனர். அதனால் மக்கள் தேவையில்லாமல் எந்த லிங்குகளையும் கிளிக் செய்து அறிமுகம் இல்லாத வலைத்தளங்களுக்கு செல்ல வேண்டாம் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.