தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் வரவில்லையேனில் இதுதான் நடக்கும் – ஊழியர்கள் கறார்!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்மையில் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய தமிழக முதல்வர் தேர்தலின் போது திமுகவினர் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் CPS ஒழிப்பு அமைப்பினர் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி இன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிரடியாக மூடப்பட்ட இந்தியாவின் முக்கிய வங்கி? RBI உத்தரவு – வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை?
Exams Daily Mobile App Download
அப்போது அவர்கள் தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்