PPF திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – 100 ரூபாய் இருந்தாலே போதும்! பொதுமக்கள் கவனத்திற்கு!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டமான பிபிஎஃப் திட்டத்தில் சேர விரும்பினால் நூறு ரூபாய் இருந்தாலே போதும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து விடலாம். மேலும் இத்திட்டத்தின் மூலமாக என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதற்குரிய அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PPF திட்டம்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான ஒரு திட்டமாகும். இந்த முதலீட்டு திட்டம் அரசின்கீழ் செயல்பட்டு வருவதால் முதலீடு மற்றும் சேமிப்புகள் அனைத்தும் ஆபத்து இல்லாதவை. ஒவ்வொரு வருடத்திலும் இரண்டு முறை பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் இந்திய அரசாங்கத்தால் மறுஆய்வு செய்யப்பட்டு திருத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் அறிவிக்கப்படும் வட்டி விகிதத்திற்கு ஏற்ப வருமானமும் உத்திரவாதமும் இருக்கிறது என்பதை விட சிறந்த வருவாயை பிபிஎஃப் மக்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் ‘ஸ்வர்மா’ சாப்பிட விரைவில் தடை? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
பிபிஎஃப்ல் வழங்கப்படும் வட்டி வீதத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பிபிஎஃப் தொடர்ந்து எவ்வளவு சிறப்பான நன்மைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். 100 ரூபாய் வைத்திருந்தாலே போதும் பிடிஎஃப் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் அக்கவுண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச முதலீடு தொகையானது 1.5 லட்சம் ஆகும். ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 500 செலுத்தினால் கூட போதும்.
இந்த பிபிஎஃப் அக்கவுண்டில் வாடிக்கையாளர்கள் நல்ல ஒரு லாபத்தை பெறலாம். பிபிஎஃப் முதலீட்டை உங்களது நிதி இலக்குடன் சீரமைத்து விட்டால் வரி சலுகைகளை பெறும் போது அதில் சிறப்பான முதலீடும் இருக்கும். ஒரு சிலர் வரிச்சலுகைக்காக மட்டுமே பிபிஎஸ்எல் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் போர்ட்ஃபோலியோவில் முதலில் ஒரு முக்கிய பகுதியாக மட்டுமே இருக்கவேண்டும். உங்களது நிதி இலக்குகளை அடைய தேவையான அம்சங்களுடன் பிபிஎஃப் அலோகேஷன் அடிப்படையில் எதிர்பார்ப்புகளையும் முடிவு செய்து கொள்ளலாம்.