1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து 2022-23 ம் கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்

ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டிற்கான வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களின் தொகுப்பை ஒடிசா பள்ளிக் கல்வித் திட்ட ஆணையம் (OSEPA) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (DEOs) மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (DPCs) ஆகியோருக்கு OSEPAன் மாநில திட்ட இயக்குனர் அனுபம் ஷா எழுதியுள்ள கடிதத்தில், ஒடிசா மாநிலத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் படிப்புகள் நடப்பு கல்வியாண்டில் உரிய நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தங்க நகைக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு – இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

தொடர்ந்து கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், DEO, DPC, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் நடப்பு ஆண்டிற்கான பாடத்திட்டத்தை முடிக்க சரியான திட்டமிடல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுநோய் காரணமாக மாணவர்களின் நேரடி கல்வி நிறுத்தப்பட்டபோது கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தவறவிட்ட கற்றல் நடவடிக்கையை ஈடுசெய்ய உதவ வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன் பள்ளிகள் தோறும் பின்பற்றுவதற்காக OSEPA இயக்குனர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி,

  • ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, பாடத்திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை மையமாகக் கொண்டு ஆண்டு பாடத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
  • தொற்றுநோய்களின் போது இழந்த படிப்புகளை ஈடுகட்ட ஆசிரியர்கள் தனித் திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு வகுப்பிலும் நேர அட்டவணை வகுப்பு வாரியாக மற்றும் பாட வாரியாக அமைக்கப்பட வேண்டும்.
  • குறிப்பிட்ட தேர்வுகளின் போது ஏதேனும் ஒரு பாடத்தில் பலவீனமாக இருக்கும் மாணவர்கள், பள்ளி அதிகாரிகளால் கூடுதல் கவனிப்பும் கவனமும் செலுத்தப்பட வேண்டும்.

  • அத்தகைய மாணவர்களுக்கு கூடுதல் ஆய்வுப் பொருட்கள் மற்றும் கற்பித்தல் நேரம் வழங்கப்படும்.
  • சிஆர்சிசி மாணவர்களின் படிப்பில் இருக்கும் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் மற்றும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
  • மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தை நட்பு பள்ளி சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • தலைமையாசிரியர் அனைத்து வகுப்புகளையும் மேற்பார்வை செய்து அதை மேற்பார்வை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!