புதிதாக திருமணம் ஆனவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலமாக சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் இனி ஆன்லைன் மூலமாகவே வீட்டிலிருந்தபடியே திருமண சான்றிதழில் திருத்தம் செய்யும் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
திருமண சான்றிதழ்:
தமிழகத்தில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் பெறுவதற்கு இந்த திருமண சான்றிதழ் அவசியமாகும். ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்ப திருமண சட்டங்கள் உள்ளது. அதன் அடிப்படையில் திருமணங்கள் பதிவு செய்யப்படுகிறது. அப்போதுதான் அவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். மேலும் திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமெனில் நாம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
Exams Daily Mobile App Download
உரிய ஆவணங்களை கொண்டு சென்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த திருமண பதிவில் ஏதேனும் ஒரு திருத்தம் இருந்தால் கூட நாம் நேரில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று தான் மாற்ற வேண்டும். இதனால் நமக்கு நேர விரயம் ஆகிறது. நீண்ட நேரம் காத்திருப்பதால் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இந்த நிலையில் சில இடைத்தரகர்கள் பலர் சான்றிதழில் திருத்தம் செய்து தருவதாக கூறி அதிக பணத்தை பெற்று செல்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இனி திருமண சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி திருமண சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் https://tnreginet.gov.in/