UPSC: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) மூலமாக தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி எழுத்து தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த மே மாதம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு திருமணமாகாத ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்தேர்வுக்கு 12-ம் வகுப்பு அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்பு இதற்கான எழுத்து தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 4-ம் தேதி அன்று நடத்தப்பட்டது.
இதையடுத்து இத்தேர்வு முடிவுகளுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நபர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றவர்களாவார்கள். இந்த முடிவுகள் வெளியான 2 வார காலத்திற்குள், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் நபர்கள் இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு இவர்களுக்கு நேர்காணலுக்கான தேர்வு மையம் மற்றும் தேதி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு தங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஏழை எளிய குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4000 உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க!
Exams Daily Mobile App Download
இந்த நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது மற்றும் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் [email protected] என்
UPSC NATIONAL DEFENCE ACADEMY AND NAVAL ACADEMY EXAMINATION (II) Result
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்