ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட பான்கார்டு வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பான்கார்டு பன்கார்டுகள் வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் அதை சரண்டர் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பான்கார்டு :
இந்தியாவில் பான் கார்டு என்பது நிரந்தர வங்கி கணக்கு எண் ஆகும். இது இந்திய வருமான வரித் துறையால் வழங்குகிறது. இதனை வைத்து வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் வரி கட்டுபவரின் இதர செயல்பாடுகளுக்கு பான் கார்டு பயன்படுகிறது. பான் கார்டு பெற நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வங்கி அறிக்கை ,ரேஷன் கார்டு , அடையாள அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்கள் தேவை. 10 இலக்க வரி வடிவ எண் பான் எண் ஆகும்.
கல்லூரிகள் மீண்டும் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!
தனி மனிதனின் முக்கியமான ஆவணமாக பான் கார்டு உள்ளது. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசத்தையும் தொடர்ந்து நீட்டித்து வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் சட்டப்படி அது குற்றமாகும். சிலர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர் இவர்களுக்கு 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் உடனே அதை சரண்டர் செய்து விட வேண்டும். ஆன்லைன் மூலம் சரண்டர் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பான் கார்டு சரண்டர் செய்யும் வழிமுறைகள் :
- முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற வருமான வரித்துறையினரின் இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
- அதில் Changes of Correction in Existing PAN Data/Reprint of PAN Card என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- பிறகு புதிய பக்கம் தோன்றும் அதில் உங்கள் விவரங்கள் மற்றும் நீங்கள் சரண்டர் செய்யும் பான்கார்டு விவரங்களையும் பதிவிட வேண்டும்.
- அதன் பிறகு அந்த விண்ணப்ப படிவத்தை சமிட் கொடுக்கவும்.அடுத்த பக்கத்தில் நீங்கள் சரண்டர் செய்யும் பான் கார்டின் ஸ்கேன் காப்பியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பிறகு பான் கார்டு சரண்டர் செய்துவிடும் உறுதிப்படுத்த மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும்.