தமிழகத்தில் வேலை தேடுவோர் கவனத்திற்கு.. சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் வேலை தேடுவோர் கவனத்திற்கு.. சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலை தேடுவோர் கவனத்திற்கு.. சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலை தேடுவோர் கவனத்திற்கு.. சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 14 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு அரசு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்து வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாமக்கல் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த இருக்கிறது.

அந்த வகையில் நாமக்கல், மோகனூர் ரோடு லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற அக். 14 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2020, 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த 18 முதல் 20 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் எனவும் மாத சம்பளம் ரூ. 16,557 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் இதை செய்யாதீர்கள் – மீறினால் நடவடிக்கை! மாநில அரசின் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

மேலும் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பாதுகாப்பான இடவசதி வழங்கப்படும். இந்த முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய சுய விவரம், கல்விச்சான்று, மற்றும் ஆதார் அட்டை உடன் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடித்து முகாமில் கலந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!