Jio போன் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ரூ.200க்கும் குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் இதோ!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் பயனர்களுக்கான புதிய விலை குறைந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
ஜியோ போன்:
இந்தியாவில் கொரோனா பரவிய நாள் முதல் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலம் செய்யப்படுவதால் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தே செய்யப்படுகிறது. வீட்டிலிருந்து பணிபுரிவோர் நாள் ஒன்றுக்கு அதிக அளவு டேட்டா தேவைப்படுகிறது. இந்த நிலையில் பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ஜியோவில் வாடிக்கையாளருக்கு அதிக டேட்டா கிடைக்கும் படியான போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு – அரசாணை வெளியீடு!
அண்மையில் ஜியோ நிறுவனம் தனது பிரீபெய்டு கட்டணங்களை 20-லிருந்து 25% வரை உயர்த்தியது. இதனால் பயனர்கள் பொருளாளராக ரீதியாக சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் அவ்வப்போது மலிவு விலை ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து ஜியோ போன் பயனர்களுக்கான குறைந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.75 ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 100எம்பி டேட்டாவுடன் 200MB கூடுதல் டேட்டா, அன்லிமிடெட் காலிங் ஆகிய நன்மைகளை 23 நாட்களுக்கு அளிக்கிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
மேலும் ரூ.91 ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 100MB டேட்டா, அன்லிமிட்டட் காலிங், ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா, 50 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது. அடுத்ததாக ரூ. 125 திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் , 300 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகியவைகளை 23 நாட்கள் வேலிடிட்டி உடன் அளிக்கிறது. ரூ.152 திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ,100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தா ஆகியவற்றை அளிக்கிறது.