IT நிறுவன ஊழியர்களின் கவனத்திற்கு – இனிமேல் நிரந்தரமாக WORK FROM HOME!
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யலாம் என்று ஊழியர்களை அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில் CIEL HR நிறுவனம் Work From Home தொடர்பாக மேற்க்கொண்ட ஆய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
IT ஊழியர்கள்
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ம் ஆண்டு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளிவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதனால் தனியார் நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்த தனது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் இதற்கென்று கணினி, மேஜை, இன்டர்நெட் உள்ளிட்ட பல வசதிகளை ஊழியர்களுக்கு செய்து கொடுத்தனர்.
Exams Daily Mobile App Download
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று பல நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருவதால் தங்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை வேண்டுமென்று கூறுகின்றனர். மேலும் ஏராளமான ஊழியர்கள் தங்களை அலுவலகத்திற்கு அழைத்தால் வேலையே வேண்டாம் என்று கூறுவதாக தனியார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர். அதனால் நிறுவனங்கள் எந்தவொரு முடிவையும் சுலபமாக எடுக்க முடிவதில்லை.
HDFC, ICICI & Federal வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – FD திட்ட வட்டி விகிதம் உயர்வு!
மேலும் CIEL HR நிறுவனம் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 50 சதவீத நிறுவனம் வீட்டில் இருந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ஐடி நிறுவனங்கள் தவிர டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கான பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. இனி கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஊழியர்களுக்கு Work From Home என்ற நடைமுறையை வழங்க பல தனியார் நிறுவனங்கள் முன் வருகின்றனர்.