IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை பெரும்பாலும் மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவை IRCTC என்ற ஆப் மூலமாக மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் எண்ணை IRCTC கணக்குடன் இணைப்பதன் மூலமாக அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தற்போது ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் நாள்தோறும் இதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டு வருகிறது. அதனால் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரயில் டிக்கெட்டுகளை IRCTC என்ற ஆப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் முன்னதாக 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம் என்று IRCTC நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு நீங்கள் IRCTCயில் கணக்கை தொடங்க வேண்டும். இதனை தொடர்ந்து இந்த கணக்கில் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால் 2 மடங்கு கூடுதலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அதாவது ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். அதனால் தற்போது இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து IRCTC கணக்குடன் ஏராளமானோர் தங்களின் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஆதார் இணைப்பதற்கான வழிமுறைகள்
1. இதற்கு முதலில் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களின் கணக்கிற்குள் நுழைய வேண்டும்.
2. அதன் பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள “My Account” என்பதை கிளிக் செய்து அதில் ‘link your aadhaar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
3. இதையடுத்து உங்கள் ஆதார் எண்ணில் உள்ள பெயரை சரியாக டைப் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
4. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு “OTP” எண் அனுப்பப்படும். அதன் பின் OTP எண்ணை IRCTCயில் பதிவு செய்து அதை உறுதிப்படுத்துக என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. இறுதியாக உங்களின் KYC விவரங்களை சரிபார்த்த பின் IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் “your aadhaar has been successfully verified’ என்ற செய்தி திரையில் காண்பிக்கப்படும்.