இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – ‘ மூன்லைட்டிங்’ முறைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் சில காலமாக ஒன்றிற்க்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றி வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து நிறுவனங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மூன்லைட்டிங் முறை:
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இன்னொரு நிறுவனத்திலும் மாலை நேரம், இரவு நேரம் அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்வதுதான் மூன்லைட்டிங் எனப்படுகிறது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் தற்போது அதிக அளவில் மூன் லைட்டிங் முறையில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா கால கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார பற்றாக்குறை மற்றும் ஐடி ஊழியர்களின் தேவை அதிக அளவில் இருந்ததால், அதிக நபர்களால் கடைபிடிக்கப்பட்டது.
இது குறித்து ஆரம்பத்தில் நிறுவனங்கள் எந்த வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது சில மாதங்களாக ஐடி நிறுவனங்கள் இது குறித்த அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக, ஸ்விக்கி மற்றும் Fintech unicorn Cred நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தங்களின் பணி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பிற நிறுவனங்களில் பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. ஆனால், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
ஷாக் தகவல்! அதிரடியாக மூடப்படும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் – நிலைகுலைந்து நிற்கும் மக்கள்!
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விதிகளின் படி ஊழியர்கள் மூன்லைட்டிங் முறையை கடைபிடிக்க அனுமதி கிடையாது என்றும், மேலும் எந்தவொரு விதி மீறலும் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இதேபோல், விப்ரோ நிறுவனமும் தங்கள் ஊழியர்கள் மூன்லைட்டிங் முறையை பின்பற்றுவதை அனுமதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்