HDFC, SBI & ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் உயர்வு!
சமீப காலமாக ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட முன்னணி வங்கித்துறை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்களை இப்பதிவில் காணலாம்.
வட்டி விகிதங்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் உயர்த்தி அறிவித்தார். இதை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் தங்கள், வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனங்களான ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் இந்த வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு இனிமேல் வட்டி விகிதங்களில் கணிசமான உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் மற்ற வங்கிகளும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் எச்டிஎஃப்சி வங்கி 5 புள்ளிகள் வரை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இப்போது வரை இந்நிறுவனத்தில் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு 35% வட்டி விகிதம் அமலில் இருக்கிறது.
ஜூன் 4 மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இப்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் ஏற்பட்ட திடீர் உயர்வால் கடன் பெற்ற 30 லட்சம் பேர் இனி 7.15 சதவீதமும், 75 லட்சம் வரை கடன் பெற்ற 30 லட்சம் பேர் 7.40 சதவீதமும் வட்டி செலுத்த வேண்டும். ஆனால், பெண் வாடிக்கையாளர்களுக்கு 5% வட்டி குறைவாக இருக்கும். இதே போல ஐசிஐசிஐ வங்கியும் வீட்டு கடனுக்கான எம்எல்சிஆர் வட்டி விகிதத்தை 30% ஆக உயர்த்தியுள்ளது. அந்த வகையில் இவ்வங்கிகளில் ஜூன் 1 முதல் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 40 புள்ளிகளாக உயர்ந்து 8.10 என அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக SBI வங்கியும் ஜூன் 1 முதல் வீட்டு கடனுக்கான வட்டியை 7.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.