தமிழகத்தில் உள்ள பட்டதாரிகள் கவனத்திற்கு – வேலைவாய்ப்பிற்கு உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற வருடம் இறுதியில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்தனர். இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு இயல்பு நிலையில் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப் பட்டு வருகின்றது. மேலும் இந்த வருட துவக்கத்தில் tnpsc குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளையும் வெளியிடவுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி இருந்தது.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் EPF கணக்குடன் PAN எண்ணை இணைப்பது எப்படி?
இந்த நிலையில் தற்போது tnpsc சார்பில் சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பிட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு? அரசு தரப்பு விளக்கம்!
மேலும் இந்த பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 16 என்றும், அதன் பின்னர் கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் வயது தகுதியாக, 01.07.2022 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது. இந்த பணிக்கான சம்பளமாக ரூ.56,100 முதல் 2,05,700 வரை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் தேர்வு முறையாக இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.