தமிழகத்தில் அரசு கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் விரிவான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
கல்வி இயக்ககம்:
தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத் தேர்வுகள் நடப்பட்டது. மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அரசு கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடந்த மாதம் முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன்படி இதுவரை பொறியியல் படிப்பில் சேர 1.91 லட்சம் பேரும், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர சுமார் 3.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கல்வி இயக்ககம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை எப்போது? முக்கிய கோரிக்கை
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் 2022- 2023 கல்வியாண்டில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ, பி.காம், பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டபடிப்புக்கு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக பி.காம் இரண்டாம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.