தங்க நகைக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு – இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
இந்தியாவில் சாமானிய மக்கள் தங்களின் நிதி நெருக்கடி காலத்தில் தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்று வருகின்றனர். தற்போது தங்க நகைக்கடன் வாங்க நினைப்பவர்கள் இதனை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நகைக்கடன்
இந்தியாவில் தங்க நகைகளை அடமானம் வைத்து அதன் மூலமாக பெரும்பாலானோர் கடன் பெற்று வருகின்றனர். ஏனெனில் இதற்கு குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. அதனால் ஈஸியாக வட்டி செலுத்தி நகைகளை மீட்டி கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் நகைக்கடன்களை பெற்று வருகின்றனர். அத்துடன் தங்கத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதையடுத்து தற்போது தங்க நகைக்கடனை பெறும்போது சில விதிமுறைகளை நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு மாற்றம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாக பெற முடியும். அத்துடன் நகைக்கடன் பெற நினைப்பவர்கள் வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்து பெற வேண்டும். ஏனெனில் நகைக்கடைக்காரர்கள் மற்றும் சிறிய நேரக் கடன் வழங்குபவர்களிடம் உங்களின் நகைகள் பாதுகாப்பானதாக இருக்காது. மேலும் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்று ஆராய்ந்து எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும் என்று கண்டறிந்து நகைக்கடன் பெற வேண்டும்.
தற்போது என்பிஎஃப்சிகள் நிறுவனத்தில் குறைவான அளவே வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் தங்க நகைக்கடன் பெற 18-24 கேரட்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் இதற்கான வட்டி விகிதம் எல்டிவி விகிதம், கடன் காலம், கடன் தொகை உள்ளிட்ட காரணிகளை கொண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அத்துடன் தங்க நகைக்கடனை 7 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தி விட வேண்டும். மேலும் தற்போது வங்கிகளில் 75% எல்டிவி வரை கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தற்போது 60% எல்டிவி என்பது தங்க மதிப்பு ரூ.1 லட்சமாக இருக்கும் போது ரூ.60,000 வரை கடன் தொகை வழங்கப்படுகிறது.