முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் கவனத்திற்கு – சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது சேலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து தற்போது சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற அரசு ஒரு வாய்ப்பை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பான சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிபுரிய 8.11.2011 அன்று முன்னாள் மக்கள் நலப்பணியாளராக இருக்க வேண்டும். அத்துடன் தங்களுக்கு இப்பணியில் சேர விருப்பமென்றால் மட்டுமே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்துடன் தங்களின் விருப்ப கடிதத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் இப்பணியில் சேர விரும்பும் முன்னாள் மக்கள் நலப்பணியாளர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை தாங்கள் பணி புரிந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வருகிற 13ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.