உங்கள் பயணத்திற்கான ட்ரெயின் லேட் ஆக வந்துவிட்டதா? – அப்போ உங்களுக்கு இது இலவசம் தான்!
ரயில் பயணங்களுக்கு மக்கள் முன்பதிவு செய்து காத்திருக்கும் போது ரயில் தாமதமாக வந்துவிட்டால், சூப்பர் பலன் ஒன்று காத்திருக்கிறது. இதனை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
இலவச ஏற்பாடு:
மக்களுக்கு குறைவான விலையில் நீண்ட தூர பயணங்களில் உதவியாக இருப்பது, ரயில்கள் தான். பயணிகள் முன்பதிவு செய்து கொள்வதற்கும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணத்திற்கான டிக்கெட்டை ரத்து செய்யவும் பல வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பான வாய்ப்பு ஒன்றினை அளிக்கிறது. இதனை பற்றி பலருக்கும் தெரியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டிய ரயில் 2 மணி நேரங்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உணவு வழங்க வேண்டியது கட்டாயமாகும். 2 மணி நேரத்திற்கு குறைவான தாமதத்திற்கு இந்த சலுகை செல்லுபடியாகாது. விதிமுறைகளின் படி, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிகளுக்கு அளிக்கப்படும் உணவுகளுக்கான பட்டியலும் வெளியாகியுள்ளது.
NLC நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது! நேர்காணல் மட்டுமே!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி, காலை உணவிற்கு டீ , காபி, 2 பிஸ்கட், மாலையில் டீ , காபி, 4 பிரட் துண்டுகள், மதிய உணவில் ரைஸ், பருப்பு, ஊறுகாய் இரவு உணவில் 7 பூரிகள், வெஜ்/ஆலு பாஜி, ஊறுகாய் பாக்கெட் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IRCTC யின் இந்த பலனை பயணிகள் முழு உரிமையோடு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.