ரயில் பயணிகள் கவனத்திற்கு.. பண்டிகை காலங்களில் 211 சிறப்பு ரயில்கள் – இந்திய ரயில்வே அறிவிப்பு!
இந்தியாவில் இனி வரும் நாட்களில் பண்டிகை காலம் என்பதால், ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக 211 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எந்தெந்த நகரங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறப்பு ரயில்கள்
உலகளவில் மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டது இந்திய ரயில்வே. இந்தியாவில் இயங்கி வரும் ரயில்களில் சுமார் 500 கோடி மக்கள் ஆண்டுதோறும் பயணம் செய்து வருகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் கூட ரயில்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் வெகுதூர பயணங்களுக்கு ரயில்கள் தான் சுலபமானதாக இருக்கிறது. இந்நிலையில் இனி வரும் நாட்களில் பண்டிகை விடுமுறை நாட்கள் அதிகம் வர இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் பலர் விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ரயில் பயணங்களை மக்கள் விரும்புகின்றனர். எனவே ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் அமர வசதி இல்லாமல் ரயில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அடுத்து வரும் பண்டிகைக் காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் இந்திய ரயில்வே 211 சிறப்பு ரயில்களை இயக்க போவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் துணை மதிப்பீடு – நிதியமைச்சர் இன்று தாக்கல்! ரூ. 3795.72 கோடி ஒதுக்கீடு!
Exams Daily Mobile App Download
இந்த சிறப்பு ரயில்கள் தர்பங்கா, அசம்கர், சஹர்சா, பாகல்பூர், முசாபர்பூர், ஃபிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் போன்ற ரயில் பாதைகள் வழியாக நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க இருப்பதாக தற்போது இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்