தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு – அடுத்த 23 நாட்களுக்கு இந்த ரயில் சேவை நிறுத்தம்!

0
தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு - அடுத்த 23 நாட்களுக்கு இந்த ரயில் சேவை நிறுத்தம்!
தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு - அடுத்த 23 நாட்களுக்கு இந்த ரயில் சேவை நிறுத்தம்!
தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு – அடுத்த 23 நாட்களுக்கு இந்த ரயில் சேவை நிறுத்தம்!

ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் அடுத்த 23 நாட்களுக்கு கோவை மாவட்டத்திற்கு வராது என்று சேலம் ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ரயில் ரத்து:

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கும் நிலையில் அவர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் பொருட்டு அவ்வப்போது ரயில் மற்றும் ரயில் வழித்தடங்களில் சில பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளின் போது அப்பகுதி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில் பொறியியல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

நாள்தோறும் காலை 6 மணிக்கு கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இருந்து புறப்படும் ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் 3ம் நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். இந்த ரயிலானது கோவை மற்றும் திருப்பூர் வழியாக செல்லும். கோவைக்கு மதியம் 12.20 மணிக்கும் திருப்பூருக்கு மதியம் 1.10க்கும் வந்து சேரும்.

மாநில அரசின் குடும்ப ஓய்வூதியம் குறித்து தொடரப்பட்ட வழக்கு – உயர்நீதிமன்றம் ரத்து!

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் போத்தனூர் – கோவை இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் அடுத்த 23 நாட்களுக்கு அதாவது நாளை முதல் டிசம்பர் 23ம் தேதி வரை கோவை ரயில் நிலையத்திற்கு வராது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!