phD படிப்பில் சேர விரும்புவர்கள் கவனத்திற்கு – AICTE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவலின் போது கல்வி முறை முழுவதும் மாற்றம் அடைந்தது. பெரும்பாலும் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் கல்வி:
இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடந்து வந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலும் கல்வியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இளநிலை பட்ட படிப்புகள் 3 ஆண்டு காலம் என்று இருந்து வரும் நிலையில் புதிய கல்வி கொள்கையின் படி 4 ஆண்டுகால இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டுகால இளநிலை படிப்பை மாணவர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவே படிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. மேலும் தொலைதூர முறையிலும் இப்படிப்பை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த புதிய கல்வி முறையில் மூலம் இளங்கலை பட்ட படிப்பை முடித்தவர்கள் நேரடியாக பிஎச் டி படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் ஆன்லைன் வழியில் PhD படித்தால் அது செல்லாது என்று தெரிவித்துள்ளது. அதனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் ஆன்லைன் வாயிலாக phD படிக்கலாம் என்று வரும் விளம்பரத்தை கண்டு ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.