சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்! அமைச்சர் தகவல்!
இந்தியாவில் சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கேஸ் சிலிண்டர்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சிலிண்டர்:
இந்தியாவில் நாளுக்கு நாள் சிலிண்டர் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சிலிண்டர் வாங்கும் போது மத்திய அரசு சார்பாக குறிப்பிட்ட தொகை மானியமாக கிடைத்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று பாதிப்பு அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு ஆகியவை காரணமாக சிலிண்டரின் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம் மானிய விலையும் படிப்படியாக குறைந்தது. இது குறித்து பயனர்கள் புகார் தெரிவித்து வந்தனர். உரிய மானிய தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து ஆன்லைன் வாயிலாக மானியத் தொகை வழங்கப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ளும் முறை கொண்டுவரப்பட்டது.
நவ.19 அன்று தரவரிசை தேர்வுகள் தேதி மாற்றம் – குரூப் 1 தேர்வு எதிரொலி!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது கேஸ் சிலிண்டர்கள் திருடப்படுவதை தடுக்க QR Code வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள சிலிண்டர்களில் QR Code ஒட்டப்படும். இனி உற்பத்தியாகும் புதிய கேஸ் சிலிண்டர்களில் QR Code வெல்டிங் செய்யப்படும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் உங்கள் சிலிண்டர் எங்கு உள்ளது என்பதை எளிதாக கண்டறியலாம். உலக LPG வாரத்தை முன்னிட்டு இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.