அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. இனிமேல் வேலை நேரத்தில் கைப்பேசிக்கு தடை!! அதிரடி உத்தரவு!!
மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பணியின் போது கைப்பேசியை பயன்படுத்தி நேரத்தை வீணடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் ஊழியர்கள் பணியின் போது கைப்பேசியை பயன்படுத்த தடை என அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊழியர்கள் கவனத்திற்கு
தற்போதைய கால கட்டத்தில் கைப்பேசியை பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் கைப்பேசி ஒன்று இல்லையெனில் அனைத்து சேவைகளையும் பெறுவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்போம். மேலும் கைப்பேசியை தற்போது எத்தனை மணி நேரம் ஆகிறது என தெரியாமல் மணிக்கணக்கில் பயன்படுத்தி வருகின்றோம். இந்த நிலையில் மாநில அரசு தனது அரசு ஊழியர்களை பணியின் போது கைப்பேசியே பயன்படுத்தக்கூடாது என்ற அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது ஆந்திர மாநிலத்தில் மின்வாரிய ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பணி நேரத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆந்திர பிரதேச மத்திய மின் விநியோக நிறுவனத்தின் தலைவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாநிலத்தில் மின்வாரிய ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை மணிக்கணக்கில் பயன்படுத்துகின்றனர். இதனால் அன்றாட வேலை பாதிப்படைகிறது. அத்துடன் சிறிய வேலையை முடிப்பதற்கு அதிக கால நேரத்தை ஊழியர்கள் எடுத்து கொள்கின்றனர்.
ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. இனி அனைத்து தகவலையும் வாட்ஸ் அப்பில் பெறலாம் – சூப்பர் வழி வந்தாச்சு!
Exams Daily Mobile App Download
இது பொதுமக்களுக்கு மிகுந்த தொல்லையாக இருக்கும். அதனால் இதனை தடுக்கும் விதமாக தற்போது கணினி பயன்பாட்டாளா்கள், ஆவண உதவியாளர்கள், தட்டச்சாளா்கள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பணியின் போது கைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதிய உணவு நேரம், இடைவேளையில் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதனை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்