அரசு பள்ளி ஆசிரியர்கள் இதை செய்யாதீர்கள் – மீறினால் நடவடிக்கை! மாநில அரசின் எச்சரிக்கை!

0
அரசு பள்ளி ஆசிரியர்கள் இதை செய்யாதீர்கள் - மீறினால் நடவடிக்கை! மாநில அரசின் எச்சரிக்கை!
அரசு பள்ளி ஆசிரியர்கள் இதை செய்யாதீர்கள் - மீறினால் நடவடிக்கை! மாநில அரசின் எச்சரிக்கை!
அரசு பள்ளி ஆசிரியர்கள் இதை செய்யாதீர்கள் – மீறினால் நடவடிக்கை! மாநில அரசின் எச்சரிக்கை!

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பிற தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகின்றனர். சிலர் மாலை நேரங்களில் டியூசன் சென்டர்களில் பாடம் நடத்தி வருகின்றனர். இது போன்ற ஆசிரியர்களுக்கு தற்போது மணிப்பூர் மாநில அரசு முக்கிய எச்சரிகையை விடுத்துள்ளது.

எச்சரிக்கை:

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக வீட்டில் இருந்தே கல்வி பயின்று வந்தனர். இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் நேராக சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மீண்டும் பள்ளிகளை திறக்க கோரிக்கைகள் எழுந்தது. வெகு நாட்களாக வீட்டிலேயே இருந்ததால் ஆரம்ப நிலை மாணவர்கள் தொடர் பயிற்சி இன்றி எழுத்துகளை மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு 2022 – 2023ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பள்ளிகளில் பணிபுரிவதை தாண்டி பிற நேரங்களில் தனியார் கல்வி நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். மாலை நேரங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் தாங்களாகவே வீட்டிலோ அல்லது டியூசன் சென்டர்களிலோ டியூஷன் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!!

Exams Daily Mobile App Download

சிலர் வேறு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பாடம் கற்பித்து வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் மாநில அரசு, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அரசின் கல்வி துறையில் பணி செய்யும் ஆசிரியர்கள் தனியார் கல்வி அல்லது பயிற்சி மையங்களில் பணிபுரிவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!