தமிழகத்தில் பி.எட்., எம்.எட்., மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வி கமிஷனரகம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பி.எட்.,எம்.எட்., மாணவர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒதுக்கீட்டுப் பணிகள் குறித்து முக்கிய உத்தரவை பள்ளிக்கல்வி கமிஷனரகம் பிறப்பித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு பற்றிய முழு விவரத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
புது நடைமுறை:
தமிழகத்தில் சிறப்பான நல்லாசிரியர்களை உருவாக்கும் நோக்கில் கடந்த 2008 ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு கல்வியியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசியின் 12பி எனப்படும் சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் நிதியுதவி மற்றும் புதிய கல்விசார் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 650 க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிட வேண்டியவை.
Exams Daily Mobile App Download
இந்த கல்லூரிகளில், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ , மாணவியர் படிக்கின்றனர். மேலும் 2 ஆண்டுகள் நடத்தப்படும் இந்த படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், 80 நாட்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேரடி களப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த களப் பயிற்சிக்கு ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே, பள்ளிகளை ஒதுக்குவர். நடைமுறைச் சிக்கலால், பயிற்சி ஆசிரியர்களுக்கு சரியான முறையில், பள்ளிகள் ஒதுக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்தன. இதை கருத்தில் கொண்டு பி.எட்., – எம்.எட் ஆசிரியர் களப் பயிற்சிக்கான பள்ளிகள் ஒதுக்கீட்டில், இனி முதன்மை கல்வி அலுவலர்கள் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்கு செல்லுவோர் கவனத்திற்கு – ஆகஸ்ட் 4 நடை திறப்பு
அதாவது இனி பள்ளிக் கல்வி கமிஷனரகம் அனுப்பும் பட்டியல் அடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, எந்த பள்ளியில், எத்தனை பேருக்கு ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லுாரிகளே முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள் தவிர மற்ற தனியார் பல்கலைகளின் மாணவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களே இடங்களை ஒதுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்திலேயே பயிற்சி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவர், அவர்களை கற்பித்தல் பணிக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சி.இ.ஓ.,க்களுக்கு கமிஷனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.