PM-Kisan திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 12 ஆவது தவணை கிடைப்பதற்கான வழிமுறைகள்!
PM-Kisan திட்டத்தின் மூலமாக இது வரைக்கும் விவசாயிகள் 11 தவணைக்கான நிதியுதவியை பெற்றுள்ளனர். 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை பெற வேண்டும் என்றால் ஆதாரின் விவரங்களை இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது.
PM-Kisan திட்டம்:
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை, எளிய விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் ஒரு ஆண்டிற்கு மட்டும் ரூ.6000 வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது வரைக்கும் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 11 தவணைக்கான நிதியுதவி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 12 ஆவது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர்.
எப்போதுமே PM-KISAN திட்டத்திற்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுகிறது. தற்போது நிதி விடுவிப்பு நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, PM-KISAN திட்டத்தின் 12 ஆவது தவணைக்கான பணம் ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், PM-KISAN திட்டத்தில் நிதியுதவி பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் கட்டாயமாக ஆதார் எண்ணை சரிபார்க்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பென்சன் வாங்குபவர்களுக்கு ஷாக் நியூஸ் – மத்திய அரசு அதிரடி
Exams Daily Mobile App Download
அதாவது, விவசாயிகள் PM-KISAN திட்டத்துடன் கண்டிப்பாக ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும். முதலில், www.pmkisan.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஆதார் எண் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படுகிறது. அந்த OTP எண்ணை பதிவு செய்து ஆதாரின் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஆதாரின் விவரங்களை சரியாக பதிவு செய்தால் மட்டுமே 12 ஆவது தவணை அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.