EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – கவனிக்க வேண்டிய முக்கிய 7 அம்சங்கள்!
இந்திய அஞ்சல் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு சிறந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
வருங்கால வைப்பு நிதி :
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் வங்கிகளை விட அதிக லாபம் தரும் வட்டியும் அளிக்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் கால அளவும் உள்ளது. இதன் மூலம் அஞ்சலக திட்டத்தில் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டித் தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
அந்த வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுரக்ஷா யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள், போன்ற சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற திட்டங்களை வருங்கால வைப்பு நிதி , சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக உள்ளது. இதில் சில சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. அவசர கால கட்டங்களில் குறைந்த வட்டியில் இந்த திட்டத்திற்கு எதிராக, கடன் பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7 வது நிதியாண்டில் உங்களது பிஎஃப் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையையும் பெறலாம்.
ஆனால் ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க முடியும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருமான வரி பிரிவு 80- பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில், வரி விலக்கு உண்டு. தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆகும். மேலும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் முதிர்வு தொகைக்கு 100% வரி விலக்கு உண்டு. முதிர்வு காலம் 15 வருடங்களாகும், ஆக முன் கூட்டியேவும் முடித்துக் கொள்ளும் சலுகை வழங்கப்படுகிறது.