திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பிரம்மோற்சவம் விழா தொடக்கம்!

0
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - பிரம்மோற்சவம் விழா தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - பிரம்மோற்சவம் விழா தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பிரம்மோற்சவம் விழா தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மிகவும் சிறப்பாக நடைபெறும் பிரம்மோற்சவம் திருவிழா குறித்தான அறிவிப்பை தேவஸ்தானம் தற்போது வழங்கியுள்ளது. மேலும், பிரம்மோற்சவம் அன்று குறிப்பிட்ட சிலருக்கு தரிசன சேவைகளை ரத்து செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரித்து 10 முதல் 20 மணி நேரங்கள் வரைக்கும் கூட பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கொரோனா பரவல் குறைய குறைய திருப்பதியில் தரிசன சேவைகள் அனைத்தும் மீண்டும் துவங்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றிற்கு மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல ஆயிரக்கணக்கான பேர் முடிகாணிக்கை செய்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

Exams Daily Mobile App Download

இந்தாண்டு கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில் திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு வெகு விமர்சையாக பிரம்மோற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதாவது, திருமலையில் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அதாவது, பிரம்மோற்சவம் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தற்காலிக ஆசிரியர் நியமனம் – திருப்தி அளிக்கவில்லையெனில் ‘டிஸ்மிஸ்’! உத்தரவு பிறப்பிப்பு!

மேலும், பிரம்மோற்சவம் நடைபெற இருக்கும் 9 நாள்களும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள 4 மாடவீதிகளிலும் சாமி ஊர்வலம் விமர்சையாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பிரம்மோற்சவதிற்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம் மற்றும் விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படவுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!