திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!
திருப்பதி கோவிலில் தற்போது பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, விற்பனை ஆகியவற்றுக்கு தடை உள்ளது. இந்த நிலையில் திருமலையில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பக்தர்கள் கொண்டு வர தடை என்று என்று தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பக்தர்கள் கவனத்திற்கு:
ஆந்திர மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் உள்ள சுவாமி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களிலிருந்து நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அத்துடன் தற்போது கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் திருமலையில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கவர்கள், பைகள், பாட்டில்கள் கிடைப்பதால் இதனை கட்டுப்படுத்த வேண்டுமென்று தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர், குளிர்பானம் உள்ளிட்ட பொருளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு தடையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இனி மானியம் கிடையாது? அதிர்ச்சியில் மக்கள்!
அதாவது தற்போது எளிதில் மக்காத தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்களுக்கு பொருட்களை கொடுக்கும்போது காகித பைகளை மட்டுமே பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர், ஷாம்பு, எண்ணெய் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.