Credit & Debit Card பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்!

0
Credit & Debit Card பயன்படுத்துவோர் கவனத்திற்கு - ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்!
Credit & Debit Card பயன்படுத்துவோர் கவனத்திற்கு - ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்!
Credit & Debit Card பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் குறித்த புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த புதிய விதிகள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை செய்யும் முறையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிகள்:

தற்போது மக்கள் பெரும்பாலும் பண பரிவர்தனைகளுக்கு வங்கிகளுக்கு செல்லாமல் கிரெட்டி கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் நெட் பேங்கிங் மூலம் நமது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நீங்கள் ஒரு முறை உங்களது கார்டு விவரங்களை உள்ளிட்டு பொருட்கள் வாங்கினால் உங்களது விவரங்கள் தானாகவே சேமிக்கபடும். அடுத்த முறை நீங்கள் பணம் செலுத்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரத்தை பதிவிட அவசியமில்லை.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் ,கூகுள் பே, போன் பே, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த வணிக நிறுவனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இதனை உடனடியாக அமல்படுத்த முடியாததால் தொழில்துறை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று ஜூலை 1 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. வழங்கப்பட்ட காலக்கெடு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.

TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இதனையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கூடாது என்ற விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது. அதனால் இனி டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை செய்யும் முறையில் மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால் இனி இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டோக்கனைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமல் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க கூடாது என்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!