கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நாடு முழுவதும் தற்போது மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் அமலில் இருப்பதால் மக்கள் பலர் கைகளில் பணம் வைத்து கொள்ளாமல் கார்ட் மூலமாக டிஜிட்டல் பணவர்தனைகளை செய்கின்றனர். இந்நிலையில் கிரெடிட் கார்ட் தொடர்பான விதிமுறைகள் மாற்றம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்ட் :
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணத்தேவை காரணமாக மக்கள் வங்கிகளில் வழங்கப்படும் கிரெடிட் கார்ட் வாய்ப்பை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக ஒரே இடத்தில் இருந்தே ரொக்கமாக பணம் கையில் இல்லாமல் தேவையான இடங்களில் பணம் செலுத்த முடிகிறது. முன்பணம் எதுவும் இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய கிரெடிட் கார்ட் முக்கிய பங்கை வகிக்கிறது. அதனால் பலர் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி ஜூலை 1 ஆம் தேதி முதல் கிரெடிட் தொடர்பான சில விதிமுறைகள் மாற்றம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலமாக தவறான பில், பில் செய்யப்பட்ட தேதி, தாமதம் என பல விதிமுறைகள் மாற்றப்படும்.
Exams Daily Mobile App Download
விதிமுறைகள்:
- கிரெடிட் கார்ட் நிறுவனம் மூலமாக தவறான பில் வழங்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அதற்கு புகார் அளிக்கலாம். இது குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்ட் வைத்திருப்போர் அளித்த புகாருக்கு 30 நாட்களுக்குள் நிறுவனம் பதில் சொல்ல வேண்டும்.
- அதே போல பில் மற்றும் ஸ்டேட்மென்ட்கள் வர தாமதம் ஏற்படாமல் இருப்பதை கார்டு வழங்கும் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
- மேலும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி கார்டு வழங்கும் நிறுவனம் பில்லிங் விவரங்களை வாடிக்கையாளர்கள் பெறுவதை உறுதிசெய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
- மேலும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டை மூட விரும்பி விண்ணப்பித்து இருந்தால் கிரெடிட் கார்டு நிறுவனம், விண்ணப்பித்து 7 நாட்களில் கார்டை மூட வேண்டும். அதன் பின் உடனே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பி மூடப்பட்டதை தெரிவிக்க வேண்டும்.
- அவ்வாறு வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்து 7 நாட்களுக்குள் மூடாமல் இருந்தால் பின்னர் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதில் ஒரு நிபந்தனை என்னவென்றால், கிரெடிட் கார்டு வைத்திருப்பவரின் கணக்கில் பற்று எதுவும் இருக்கக் கூடாது
- அடுத்ததாக வாடிக்கையார்கள் விண்ணப்பித்தால் மட்டுமே கிரெடிட் கார்ட் அனுப்ப வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்காமல் அனுப்பி பில் செய்தால் அதற்கு அந்த நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்
- மேலும் புதிய விதிமுறைகளின் படி பில்லிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி ஜூலை 1 முதல், கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சி முந்தைய மாதம் 11 ஆம் தேதி தொடங்கி நடப்பு மாதம் 10ஆம் தேதி வரை இயங்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.