கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – RBI புதிய வழிகாட்டுதல்கள்! முழு விபரங்கள் இதோ!
இந்தியாவில் தற்போது கிரெடிட் கார்டு தொடர்பாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் RBI புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதனை வருகிற ஜூலை 1ம் தேதி அன்று முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு:
இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டையை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு வட்டி கிடையாது. அத்துடன் இதில் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக திருப்பி செலுத்தாவிட்டால் ஆண்டுக்கு 45% வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதில் தற்போது பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் மோசடிகளை நிகழ்த்த நாள்தோறும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனை தடுக்க தற்போது பல்வேறு வகையான விதிமுறைகளை குறித்த அறிவிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்தாவது, வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமல் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி கிரெடிட் கார்டினை மேம்படுத்தி வழங்கக்கூடாது என்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கவனத்தில் கொள்ளுமா அரசு?
மேலும் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் பில்களை மின்னஞ்சலில் அனுப்பும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர்கள் செலுத்தப்பட்ட கடன் வரம்பு, கடன் பரிவர்த்தனை செய்யப்பட்ட அடுத்த 7 நாட்களுக்குள் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு பெறவில்லையெனில் கடன் பரிவர்த்தனையை அவர்களின் வங்கிக் கணக்கில் மாற்ற வேண்டும். இந்த விதிமுறையை கிரெடிட் கார்டு வழங்கும் அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த விதிமுறையை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.