12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

0
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

தமிழகத்தில் பொதுத்தேர்வு 2022 விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் மறுகூட்டல்/ மறுமதிப்பீடுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக, கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் இறுதி வரை நடைபெற்றது. மேலும் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,37,317 பேர் எழுதியுள்ளனர். இந்நிலையில் நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார்.

Exams Daily Mobile App Download

இந்த முடிவுகளின் அடிப்படையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.மேலும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பெரும்பாலான உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் பாடப்பிரிவுகளில் மதிப்பீடு முறையில் திருப்தி அடையாத மாணவர்கள்/ அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டல்/ விடைத்தாள் மறுமதிப்பீடு திட்டத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. வருடம் தோறும், சராசரியாக கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு? அரசு ஆலோசனை!

1.மாணவர்களது விண்ணப்பங்கள் அடிப்படையில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் பின்பற்றி வருகிறது.

2.ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் நகலை பெற்றுக் கொண்ட மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால் மறுக்கூட்டல் / மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.

3.கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மறுமதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது என்பதையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

4.மறுமதிப்பீடு செய்யாமல் விடைத்தாளின் ஜெராக்ஸ் நகளுக்கு மட்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5.மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சேர்க்கை பெற ஏதுவாக, மறுகூட்டல்/மறுமதிப்பீடு நடைமுறையை தேர்வுகள் இயக்ககம் விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொண்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!