10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அறிவிப்பு!
ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வு அறிவித்தபடி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
மாணவர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. அத்துடன் அறிவித்தப்படி அனைத்து மாநிலங்களிலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் பணிகள் தேர்வு முடிந்தவுடன் தொடங்கப்பட்டது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் திட்டமிட்டப்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனை 6 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கை! போராட்டம் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தேர்வு முடிவடைந்தவுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து இன்று முற்பகல் 11 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளின் முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில் வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆந்திர மாநில பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தாவது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.