மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சம்பள அதிகரிப்பு & அகவிலைப்படி (DA) உயர்வு? விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - சம்பள அதிகரிப்பு & அகவிலைப்படி (DA) உயர்வு? விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - சம்பள அதிகரிப்பு & அகவிலைப்படி (DA) உயர்வு? விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சம்பள அதிகரிப்பு & அகவிலைப்படி (DA) உயர்வு? விவரங்கள் இதோ!

தற்போது அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும் என்ற விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அகவிலைப்படி உயர்வு

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு ஊழியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் அகவிலைப்படி உயர்வு (DA) கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் அரசு ஊழியர்களின் டிஏ ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் இருமுறை என்ற அளவில் திருத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை ஏஐசிபிஐ குறியீடு 127 புள்ளிகளுக்கு மேல் இருப்பதால், டிஏ உயர்வு ஐந்து சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்த டிஏ 39 சதவீதத்தை எட்டும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரியில், 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏவை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தியது. இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்திய தபால் துறையில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – மாதம் ரூ.19,900 ஊதியம் ..!

இதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் DA தொகை அதிகரிக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், DA அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் மற்ற 4 கொடுப்பனவுகளும் உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான அகில இந்திய CPI-IW புள்ளிகள் அடுத்த மாதங்களில் இன்னும் உயர்வடைந்தால் டிஏ தொகை 5 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த டிஏ 39 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது. இதற்கிடையில் DA தொகை அடிப்படை ஊதியத்திற்கு விகிதாசாரமாக கணக்கிடப்படுகிறது.

இந்த சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்த்தப்பட்டால், அவர்களின் வருங்கால வைப்பு நிதியும் (PF) உயர்த்தப்படும். மேலும் டிஏ உயர்வு காரணமாக ஊழியர்களின் பணிக்கொடைத் தொகையும் அதிகரிக்கப்படும். இது தவிர அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் பயண கொடுப்பனவு மற்றும் நகர அலவன்ஸ் ஆகியவற்றின் உயர்வுக்கான பாதையை தெளிவுபடுத்தியுள்ளது. அதே போல அகவிலைப்படி தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் HRA ஐ உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் ஊகங்கள் வந்துள்ளன. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்வடைய இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!