ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேலும், தற்போது அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆதார் எண் எங்கெல்லாம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஆதார் அவசியமில்லை என்றும் விரிவாக பார்ப்போம்.
ஆதார் கார்டு:
இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். மேலும் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் பல்வேறு சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. ஆனால் ஆதார் எண்ணை பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதில் உங்களின் தனிநபர் விவரங்கள் அனைத்தும் உள்ளதால் இதனை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடலாம்.
மேலும் இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் அட்டையை UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வருகிறது. அதனால் இது தொடர்பாக UIDAI நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தும் போதும் பகிரும்போதும் சாதாரண விவேகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் ஆதார் அடையாள அங்கீகார சுற்றுச்சூழல் அமைப்பு ஆதார் வைத்திருப்பவரின் அடையாளம் மற்றும் தனியுரிமையை பாதுகாத்து வைத்துள்ளது.
ஆனால் தனியார் நிறுவனங்களில் ஆதார் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது எந்தெந்த இடங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஆதார் அவசியமில்லை என்றும் பார்ப்போம். இதில் முதலாவதாக முதலில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு ஆதார் அவசியமில்லை. அத்துடன் அரசு வழங்கும் மானியத் திட்டங்களுக்கு வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆதார் இல்லாமல் காப்பீட்டு பாலிசிகளை பெற முடியும். இதனை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் 16 இலக்க எண் கொண்ட ஆதாரை பயன்படுத்தாமல் ஆதாரின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும் ஆவணத்தை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.